பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைபோதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 4
பொருள்:
பிறை போன்ற நெற்றியையுடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின் (வடம்-ஆலமரம்) கீழிருந்து வேதங்களையருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால் ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையனவாகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 3
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 5
No comments:
Post a Comment